கடந்த ஜூன் 3-ம் திகதி பகல் 12.25 மணி அளவில் காணாமல் போன ஏ.என்.32 ரக இந்திய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அருணாச்சலப்பிரதேசம் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே சிதைந்த நிலையில் விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. அதில் பயணம் செய்த 13 பேரின் நிலைமை குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த விமானம் அசாமில் இருந்து மெஞ்சுகா எனும் சீன எல்லைப்பகுதியில் சென்ற நிலையில் கட்டுப்பாடு பகுதியுடனான தொடர்பை இழந்தது.
அதைத்தொடர்ந்து, காணாமல் போன விமானத்தை தேடும்பணியில் விமானப்படை விமானங்கள், இராணுவம்,மற்றும் மலைவாழ் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையிலேயே விமானத்தின் பாகங்கள் கண்பிடிக்கப்பட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க