இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று தவிர்க்க வேண்டியவை குறித்து கருத்து

எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தவிர்க்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்காளரொருவர் தமது வாக்கை செலுத்திய பின்னர் அதனை கையடக்க தொலைபேசியில் நிழற்படமெடுத்தல், காணொளிகளை பதிவு செய்தல் மற்றும் அவற்றை சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்களிப்பு நிலையத்தில் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தல் போன்ற பாவனையுடன் வாக்களிப்பு நிலையத்திற்கு பிரவேசிப்பது சட்டவிரோதமானது என்பதால் அவற்றையும் தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர் எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க