உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதி ரணிலை சந்திக்கவுள்ளார்.

ஜப்பானிய பிரதமரின் விசேட பிரதிநிதி ஹரோடோ இசுமி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 20- 22 ஆம் திகதிக்குள் சந்திக்கவுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள சுற்றுலா அறிவுறுத்தல்களை தளர்த்தும் வகையிலேயே இந்த சந்திப்பு அமையவுள்ளது.

எனினும் அவர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலங்கைக்கான சுற்றுலா அறிவுறுத்தலை தளர்த்தவேண்டும் என்று இலங்கை சுற்றுலா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே இலங்கைக்கான சுற்றுலா அறிவுறுத்தல்களை சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, சுவீடன், சீனா, இந்தியா, பிரித்தானியா, உட்பட்ட நாடுகள் தளர்த்தியுள்ளன.

கருத்து தெரிவிக்க