முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்வதாக கூறி முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கிணங்க மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பிரபல விற்பனை நிலையமொன்றிலிருந்து காலாவதியான 700 கிலோகிராம் அரிசி மற்றும் பிஸ்கட் பைக்கற்றுகள் கைப்பற்றப்பட்டிருந்தன.
அதற்கிணங்க நேற்று (மார்ச் 28) முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த விற்பனை நிலைய உரிமையாளருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததோடு குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றம் 35,000 ரூபாய் தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் வழங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க