உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

திருமணம் செய்துகொள்ள மறுத்த பெண்ணை கொலை செய்த முதியவர்

ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் பெண்ணொருவரை முதியவர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சூரியவெவ – பெத்தேவெவ பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயை திருமணம் செய்துக் கொள்ளுமாறு 65 வயதுடைய நபரொருவர் பல தடவைகள் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினமும் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.

குறித்த பெண் கண்டிப்பாக அதனை மறுத்ததனால் நேற்று பிற்பகல் வீதியில் சென்றுக் கொண்டிருந்த போது வாகனத்தில் வந்து அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதன்பின்னர் அவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க