வெளிநாட்டு செய்திகள்

கேமரூனில் இடம்பெற்ற மோதலில் பிரிவினைவாத குழு தலைவர்கள் உட்பட 8 பேர் சுட்டுக்கொலை

கேமரூன் நாட்டு படைவீரர்களுக்கும் அந்நாட்டிலுள்ள பிரிவினைவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதலில் 2 பிரிவினைவாத தளபதிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் கேமரூன் இராணுவ உயரதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு இராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கேமரூன் நாட்டில் பிரிவினைவாத படைகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.  கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் ஆங்கிலம் பேசும் 2 பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக அறிவித்தன.  இதனால் அந்த பகுதியில் வசித்த 4 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் அச்சமடைந்து அங்கிருந்து இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க