இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து

இன்று (செப்டம்பர் 19) ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொகுதி மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து தேர்தல் அலுவலகங்களையும் அகற்றும்படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் அலுவலகங்கள் அகற்றப்படாதவிடத்து பொலிஸாரை கொண்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க