உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இருபிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி

கந்தானை வீதி மாவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதமொன்றினால் குத்தி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போதே இந்த உயிரிழப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலுமொருவர் றாகமை வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவரும் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க