உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜம்மியதுல் உலமா சபை தலைவரும், காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளன தலைவரும் தெரிவுக் குழு முன்னிலையில்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு மீண்டும் இன்று கூடவுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இந்த தெரிவுக் குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி தெரிவுக் குழு முன்னிலையில் வந்து சாட்சியமளிக்க பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் பிரதிநிதி ஒருவரும் சமூகமளித்து சாட்சியமளிக்கவுள்ளார்.

மேலும் தமது ஆளுநர் பதவியிலிருந்து விலகிய மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கும் தெரிவுக் குழுவிற்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க