உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறுபேர் மட்டக்களப்பில் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை 7 லட்சத்து 52,270 ரூபா பெறுமதியான பணத்துடன் மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சூதாட்டம் இடம்பெற்ற நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை, கல்முனை, ஆறையம்பதி, கல்லாறு, சாய்ந்தமரு , மட்டக்களப்பு புதூர் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு நீதவான நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதேவேளை சுற்றிவளைப்பின் போது ஒருவர் தப்பி சென்றுள்ளதாகவும், அவரது கையடக்க தொலைப்பேசி பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவகிறது என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க