உள்நாட்டு செய்திகள்புதியவை

அமைச்சுப் பொறுப்புகளை பகிர்ந்தளிப்பது குறித்து பேச்சு!

அமைச்சுப் பொறுப்புகளை பகிர்ந்தளிப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்ததாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் அரசியல் முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த விசாரணை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் ரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

கருத்து தெரிவிக்க