உள்நாட்டு செய்திகள்புதியவை

ஷங்ரி-லா நட்சத்திர விடுதி இவ்வாரம் திறக்கப்படவுள்ளது

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் ஷங்ரி-லா நட்சத்திர விடுதி இந்த வாரத்தில் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட மூன்று விடுதிகளில் ஒன்றான கொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதி பலத்த பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தது.

ஏனைய இரண்டு விடுதிகளும் பகுதியளவில் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஷங்ரி-லா மூடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நாளை புதன்கிழமை விடுதியின் முக்கிய சில பகுதிகள் சேவைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. மேலும் எதிர்வரும் சனிக்கிழமை தங்குமிட பகுதிகளும் சேவைக்காக திறக்கப்பட உள்ளது என விடுதி நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க