உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை தமிழர் பெங்களுரில் கைது

இந்திய பெங்களுரில் இலங்கை பொதுமகன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

35 வயதான இவர், பெங்களுர் வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகவிருந்த ஹங்கேரிக்கான வானூர்தி ஏற முயன்றபோதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இவர் இந்திய கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருந்தார்.

தமிழரான இவர் இலங்கையின் மேல்மாகாணத்தை சேர்ந்தவர்.

2012ஆம் ஆண்டு மதுரைக்கு சென்ற அவர் அங்கேயே தங்கிவிட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

2019இல் பெங்களுருக்கு சென்ற அவர் அங்கு வைத்தே இந்திய கடவுச்சீட்டை பெற்றுள்ளார்.

கருத்து தெரிவிக்க