உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மட்டக்களப்பு மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் செயற்பாடுகள்

எமது சக்தியினூடாக எமது ஆரோக்கியம் – சுகாதார மேம்பாட்டிற்கு பங்களிப்போம் எனும் தொனிப்பொருளிலான பதாகை மட்டக்களப்பு, மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் திங்கட்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது.

சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின், ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் முறைமையை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

மகிழடித்தீவு, கல்லாறு போன்ற வைத்தியசாலைகளே மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்திட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த பதாகை மகிழடித்தீவு வைத்தியசாலை வைத்திய அதிகாரி ரி.தவனேசன் தலைமையில், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்.வி.பிறேமானந், திட்டமிடல் டொக்டர் கஸ்தூரி குகன், நிருவாக உத்தியோகத்தர் நித்தியாரஜனி, மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரிகளினால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த வைத்தியசாலை மின் சுகாதார அட்டை வழங்குதல் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமையுடன், குறித்த திட்டச் செயற்பாடுகள் மிகவிரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க