உள்நாட்டு செய்திகள்புதியவை

மடு அன்னையின் திருவிழா- பாதுகாப்பு சோதனை நடத்த திட்டம்

பாதுகாப்பு காரணங்களுக்காக மடு திருத்தளத்திற்கு வரும் அனைத்து மக்களும், அவசியமான சோதனைகளுக்கு உட்படுவர் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை தெரிவித்தார்.

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான கலந்துரையாடல் இன்று  மாலை 3.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்கள அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் உட்பட இராணுவம்,பொலிஸ் , 15 திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே ஆண்டகை இதனை தெரிவித்தார்.

-இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர் வரும் 2 ஆம் திகதி நடாத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வழமை போல் இவ்வருடமும் வில்லனை நாடாத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

நிகழ்வின் பாதுகாப்பு குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சில முடிவுகள் மேற்கொண்டுள்ளோம்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதற்கு முகம் கொடுக்க மக்கள் தயாராக வர வேண்டும்.

உங்களையும்,உங்களது உடமைகளையும் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவீர்கள் என குறிப்பிட்டதோடு நாங்கள் உங்களை வரவேற்கின்றோம் என ஆயர் மேலும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பாதுகாப்பு தொடர்பாக ஆராயப்பட்டதோடு, மேலும் குடி நீர், போக்குவரத்து, சுகாதாரம், வைத்திய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க