புதியவைவெளிநாட்டு செய்திகள்

மாலியில் தாக்குதல் -100 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி தீவில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல உயிரிழப்புகள் நேர்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

சொபாலே கௌ எனும் இடத்தில உள்ள டோகோன் கிராமத்தில்  குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் இது வரை 95 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் மேலும் 19 பேரை காணவில்லை எனவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த மார்ச் மாதம் மாலியின் புலானி எனும் இடத்தில நடந்த கொடூரத் தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க