உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மலேசியாவில் ஆட்கடத்தல் முயற்சி முறியடிப்பு. இலங்கையர் உட்பட் 11பேர் கைது

ஆட்கடத்தல் முயற்சி ஒன்றை மலேசிய காவல்துறையினர் முறியடித்துள்ளனர்.

கடந்த மே 27ஆம் திகதி 11பேர் கைதுசெய்யப்பட்ட நிலையிலேயே இந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த 11பேரில் 8 இலங்கையர்களும் உள்ளடங்குகின்றனர்.

மலேசியாவின் க்லாங்வெலி மற்றும் படாங் பெசார் ஆகிய இடங்களில் வைத்தே இந்த 11 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தக்குழுவினர் இலங்கையர்களை மலேசியாவின் ஊடாக ஐரோப்பாவுக்கு அனுப்பும் நடவடிக்கையில் 2018ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில் இலங்கையர் ஒருவரை, மலேசிய ஆவணங்களை பயன்படுத்தி தாய்லாந்துக்கு ஊடாக அனுப்ப முயற்சிக்கையிலேயே 11பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

கருத்து தெரிவிக்க