உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் குறித்த ட்விட்டர் பதிவில், குறுகிய கால பயணம் எனினும் உங்களது பயணம் மிகவும் உற்சாகம் அளிப்பதாக அமைந்துள்ளது. உண்மையில் எமக்கு ஆதரவாக உள்ளீர்கள்  என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்.

எமக்கு பக்கபலமாகவும் ஒத்துழைப்பாகவும் செயற்படுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு முதல் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க