உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

குறுகிய கால பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார் மோடி

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் தாயகம் திரும்பியுள்ளார்.

மாலைத்தீவு பயணத்தை முடித்துக்கொண்ட தாயகம் திரும்பும் வழியில் அவர் இன்று இலங்கைக்கு பயணம் செய்தார்.

இதன்போது அவர் தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்துக்கு சென்றார்.

இதன்பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்புக்களிலும் பங்கேற்றார்.

இந்த சந்திப்புக்கள், இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினருடன் இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க