கிழக்கு செய்திகள்

ஏறாவூர்-தளவாய் மதுரங்குடா கிராமத்தில் யானைகள் அட்டகாசம்

மட்டக்களப்பு – ஏறாவூர் நகரத்தை அண்டிய தளவாய் – மதுரங்குடா கிராமத்திற்குள் நேற்று இரவு பிரவேசித்த காட்டுயானைகள் தென்னந்தோட்டங்களை துவம்சம் செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்பிரதேசத்தில் உள்ள  மூவருக்கு சொந்தமான தோட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளது.  அதிகாலை வேளையில் தென்னந்தோட்டங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் நூற்றுக்கணக்கான மரங்களை துவம்சம் செய்துள்ளன.

தென்னங்கன்றுகளின் குருத்துப் பகுதியை பிடுங்கி எடுத்து அவற்றை உண்டு விட்டு காட்டு யானைகள் சென்றுள்ளன. இதனால் கன்றுகள் முற்றிலுமாக அழிவுக்குள்ளாகியுள்ளன.

காட்டு யானைகள் நுழைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க