கிழக்கு செய்திகள்

காத்தான்குடியில் கடந்த 5 மாதங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த ஐந்து மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 11பேர் படுகாயடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரித்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியிலேயே
இவ்வுயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

விபத்துக்களில் 21பேர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் ஓரு வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளது.

இக்காலப்பகுதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மொத்தமாக 37 வீதி விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க