உள்நாட்டு செய்திகள்புதியவை

வடக்கு-கிழக்கு இணைப்பை இந்தியப் பிரதமருக்கு வலியுத்த வேண்டும்!

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்கும் போது, வடக்கு-கிழக்கு இணைப்பை இரா.சம்பந்தன் வலியுறுத்த வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ்.-இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு ஒரு நாள் பயணமாக வரும் இந்திய பிரதமரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்.-இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு-கிழக்கு இணைப்பின் மூலமே, இந்தியாவினதும், தமிழர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதை, இந்தியப் பிரதமருக்கு எடுத்துக் கூறவேண்டும்.

அத்துடன், இந்தச் சந்திப்பை அதற்கான தொடக்கப் புள்ளியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க