உள்நாட்டு செய்திகள்புதியவை

நாட்டின் பல பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் கேகலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் கொழும்பு, கம்பஹா, புத்தளம், கண்டி, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் கடும் மழையை எதிர்பார்க்க முடியும்.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக வலுவடைந்து வருகிறது. இதனால் தென்மேற்கு பகுதியில் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை இன்றைய தினத்தில் அதிகரிக்கக்கூடும் என்றும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்து தெரிவிக்க