உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தமிழர்களின் பூர்வீக “ஆமையன்குளம்”, “கிரிஇப்வன்வெவ”வாக மாறியது

தமிழர்களின் பூர்வீக குளங்களில் ஒன்றான ஆமையன்குளம்  புனரமைக்கப்பட்டு கிரிஇப்வன்வெவ  என்கின்ற பெயரிலே நேற்று முல்லைத்தீவுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  திறந்து வைக்கப்பட்டிருக்கிறது

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பூர்வீக வயல் நிலங்கள் பூர்வீக குளங்கள் போன்றன பல்வேறு இடங்களிலும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பல முற்றுமுழுதாக அபகரிக்கப்பட்டு  தமிழர்களது பூர்விக பிரதேசமான மணலாறு  ஒரு தனியான பிரதேச செயலகமாக (வெலிஓயா ) அமைக்கப்பட்டு அவர்களுக்கான அனைத்து செயற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே ஆமையன்குளம்  புனரமைக்கப்பட்டு கிரிஇப்வன்வெவ  என்கின்ற பெயரிலே  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  திறந்து வைக்கப்பட்டிருக்கிறது

கருத்து தெரிவிக்க