வெளிநாட்டு செய்திகள்

ஏமன் மசூதியில் துப்பாக்கிச்சூடு- ஐவர் உயிரிழப்பு

ஏமன் நாட்டின் அசாரிக் மாவட்டத்தில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளனர் .

அடையாளம் தெரியாத நபர்கள் தானியங்கி துப்பாக்கிகளுடன் மசூதியில் நுழைந்து, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதோடு அங்கிருந்த மூவரை கடத்தி சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு தாக்குதல் குறித்த விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏமன் நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஜனாதிபதி ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க