நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத் திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்ளவதற்காக நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் முல்லைத்தீவை சென்றடைந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய எண்ணக்கருவில் உருவான நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத் திட்டமானது கடந்த மூன்றாம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதனுடைய இறுதி நிகழ்வுகள் முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற இருக்கின்றது.
ஸ்மார்ட் ஸ்ரீலங்கா மற்றும் பல்வேறு வேலைத்திட்டங்கள் பல்வேறு உதவித்திட்டங்கள் முல்லைத்தீவில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது
இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக சற்று முன்னர் உலங்குவானூர்தி ஊடாக முல்லைத்தீவை வந்தடைந்திருக்கின்றார் நாட்டினுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள்
கருத்து தெரிவிக்க