உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பேராயருடனும் முஸ்லிம் எம்.பிக்கள் பேச்சு! சம்பந்தன், அநுரவை சந்திக்கவும் திட்டம்!!

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர் என்று தெரியவருகின்றது.

எதிர்வரும் 11 ஆம் திகதி மகாநாயக்க தேரர்களுடன் சந்திப்பு நடைபெறும், அதன்பின்னரே பேராயரை சந்திப்போம் என்று முஸ்லிம்  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவிகளிலிருந்து எதற்காக கூட்டாக வெளியேறினோம் என்பது உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் சர்வமதத் தலைவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டியுள்ளது.

இதன்ஓர்அங்கமாகவே மேற்படி சந்திப்புகள் நடைபெறவுள்ளன என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, முஸ்லிம் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளன.

இதன்பிரகாரம் இன்று மஹிந்தவை சந்திக்கின்றனர். அதனைத் தொடர்ந்து அடுத்துவரும் நாட்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகியவற்றின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளனர்

கருத்து தெரிவிக்க