இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

பொத்துஹெர பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவர் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்துள்ள நபரிடம் விபரங்களை உள்ளடக்காமல் பொலிஸ் அறிக்கையை வழங்குவதற்காக 5000 ரூபா இலஞ்சம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொத்துஹெர பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இலஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட போதே சந்தேகத்திற்குரிய பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளதோடு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க