உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் இன்று மாலை 5 30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்

புதுக்குடியிருப்பில் இயங்கி வருகின்ற தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணி புரிகின்ற குறித்த இளைஞர் ஆடைத் தொழிற்சாலையில் வேலை முடித்து வீடு திரும்பி சென்று கொண்டிருந்த வேளையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பேருந்தில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்

குறித்த விபத்தில் உயிரிழந்த இளைஞன் உடையார்கட்டு தேராவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரவீந்திரராசா பிரசாந்த் என்ற இளைஞர் ஆவார்

சம்பவ இடத்திற்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்து தெரிவிக்க