உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அவசரகாலச் சட்டம் தமிழர்களுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுகிறது!

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் தமிழர்களுக்கான அச்சுறுத்தலாகவே காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிளிநொச்சி இன்று 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அத்துடன் வடக்கில் அதிகமான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறன. தாக்குதல்கள் இடம்பெற்ற தென்னிலங்கை மற்றும் கிழக்கைப் பார்க்கிலும் வடக்கிலேயே அதிக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என குறிப்பிட்டார்.

தாககுதல்கள் காரணமாக ஸ்தம்பிதம் அடைந்த இலங்கை தற்போது ஓரளவு சுமுகமான நிலைக்கு வந்துள்ளது. எனினும் பாதுகாப்பு இதுவரையில் உறுதிப்படுத்தப்டவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க