வடக்கு செய்திகள்

செம்மலையில் பால் உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்தல் கட்டடம் திறப்பு

முல்லைத்தீவு- செம்மலைப்பகுதியில் கிராமிய மக்கள் சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் 2 இலட்சம் ரூபா செலவில் மீளமைக்கப்பட்ட பால் உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்தல் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், ஜனாதிபதி செயலக அதிகாரிகள், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் உமாமகள் மணிவண்னன் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட  புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ச.சத்தியசுதர்சன் கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

இதன்போது கட்டடம் திறந்துவைக்கப்பட்டதன் நினைவாக குறித்த வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க