வடக்கு செய்திகள்

தற்கொலை குண்டு தாக்குதலில் பாதீக்கப்பட்ட கட்டுவப்பிட்டி ஆலய பங்கு மக்கள் மன்னார் விஜயம்

தற்கொலை குண்டு தாக்குதலில் பாதீக்கப்பட்ட நீர் கொழும்பு கட்டுவப்பிட்டி ஆலய பங்கு மக்கள் இன்று மாலை மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

மனதளவில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடும் நோக்கில் ‘ஆற்றுப்படுத்தல்’ பயண மொன்றை குறித்த மக்கள் மேற்கொண்டுள்ளனர். இதன்படி மன்னார் மறை மாவட்ட திருத்தளங்களை தரிசிக்க இரண்டு நாள் பயணத்தை முன்னெடுத்துள்ளனர்.

அண்மையில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் குறித்த மக்கள் உடல் ரீதியாகவும் , உள ரீதியாகவும் பாதிப்பை எதிர் கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க