உள்நாட்டு செய்திகள்

வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக முறைப்பாடு-விசேட வைத்திய குழு ஆய்வு

சிங்கள-பௌத்த பெண்களுக்கு கருத்தடை சிகிச்சைகளை திட்டமிட்டு மேற்கொண்டுள்ளார் என கூறப்படும் குருநாகல் வைத்தியர் மொஹமட் ஷாபீக்கு எதிராக பெண்கள் செய்துள்ள முறைப்பாட்டை ஆய்வு செய்யும் வகையில் வைத்தியர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட கருத்தடை தொடர்பில் வைத்தியர் மொஹமட் ஷாபீக்கு எதிராக நூற்றுக்கணக்கான பெண்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க