உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் தேர்தலில் போட்டியிட கோரி மனு 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என கோரி மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த மனுவை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இதுவரைகாலமும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன அண்மையில் இந்தியா சென்றிருந்த போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பை விடுத்திருந்தார்.

இதனையடுத்தே  இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் தமது மனுவை கையளித்துள்ளார்கள்.

கருத்து தெரிவிக்க