உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

‘ மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்கவும் ‘

மகாநாயக்க தேரர்களால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” முஸ்லிம் அடிப்படைவாதம் மட்டுமல்ல சிங்கள அடிப்படைவாதமும் ஒழிக்கப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இதன்காரணமாகவே அடிப்படைவாதிகளுக்கு எதிராக குரல்கொடுத்துவருகின்றோம்.

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாத முஸ்லிம் அரசியல்வாதிகள் அமைச்சுப் பதவிகளை ஏற்கவேண்டும் என மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது சம்பந்தமாக அரசியல் வாதிகள் ஒன்றுகூடி சாதகமாக பரீசிலிக்கவேண்டும்.” என்றும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க