உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இன்று மாலைக்குள் இராஜினாமாக் கடிதம்

முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று (06) மாலைக்குள் தமது இராஜினாமாக் கடிதங்களை கையளிப்பார்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபையில் தெரிவித்தார்.

” முஸ்லிம் அரசியல்வாதிகள் கடந்த திங்கட்கிழமை கடிதம் ஒன்றின் ஊடாக இராஜினாமா குறித்த அறிவிப்பை எனக்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து இராஜினாமாக் கடிதங்களை தனித்தனியாக கையளிக்குமாறு நான் ஆலோசனை வழங்கினேன்.

இதற்கிடையில் ரமழான் பண்டிகை வந்துவிட்டது. பலர் ஊருக்கு சென்றுவிட்டனர். எனினும், இன்று காலை சிலர் இராஜினாமாக் கடிதங்களை கையளித்தனர். ஏனையோர் இன்று மாலைக்குள் கையளிப்பார்கள்.” என்றும் பிரதமர் கூறினார்.

கருத்து தெரிவிக்க