உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கோட்டாபயவுக்கு சிங்கப்பூரில் அவசர சத்திரசிகிச்சை

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அவசர இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள மௌன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே தமது தந்தையாரின் பேரின் நூதனசாலை ஒன்றை அமைத்த விடயத்தில் நிதிமுறைகேடு என்ற குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு எதிராக கொழும்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மருத்துவ விடயங்களுக்காக சிங்கப்பூருக்கு செல்லப்போவதாக கூறி கோட்டாபய நீதிமன்றத்தின் அனுமதியையும் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க