உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பொய்யான செய்திகள் தொடர்பில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம்.

பொய்யான செய்திகளின் பரிமாற்றம் மற்றும் தீவிரவாத அறிக்கைகள் என்பவை தொடர்பில் குற்றவியல் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி குறித்த குற்றங்கள் தொடர்பில் ஒருவர் குற்றவாளியாக காணப்பட்டால், அவருக்கு 10லட்சம் ரூபா அபராதம் அல்லது ஐந்து வருட சிறைத்தண்டனையை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.

பதில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ரஞ்சித் மத்தும பண்டார இந்த யோசனையை அமைச்சரவைக்கு முன்வைத்தார்.

கருத்து தெரிவிக்க