எகிப்தில் பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பம் எனும் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச்சாவடி மீதே வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இத்தாக்குதலில் 10 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதோடு, பொலிஸ் சோதனைச்சாவடி முற்றாக சேதமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் குறித்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் உரிமை கோரவில்லையென அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க