வெளிநாட்டு செய்திகள்

அவுஸ்திரேலிய செய்தி நிறுவனம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

‘அவுஸ்திரேலிய ப்ரோட்காஸ்டிங் கோர்ப்’ எனும் ஏபிசி செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

குறித்த செய்தி நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் கவென் மொரிஸ் மற்றும் இரு ஊடகவியலாளர்களின் மீது கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள அவுஸ்திரேலிய படையினரின் நடத்தை குறித்து தவறாக தொகுக்கப்பட்ட செய்தி தொடர்பிலேயே பொலிஸார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தொடர்புடைய ஊடகவியலாளரின் வீட்டிலும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு செய்தி நிறுவனத்தினால் வௌியிடப்பட்டுள்ள ‘ஆப்கன் பைல்ஸ்’ எனும் தொகுப்பில் இராணுவம் தொடர்பான இரகசியத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க