உள்நாட்டு செய்திகள்புதியவை

கடலை அண்மித்து இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை!

வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடலலை நிலப்பரப்புக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மன்னார் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரை கடற்பகுதிகளில் இவ்வாறான நிலை காணப்படும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

இதன்படி, 2.5 மீற்றர் தொடக்கம் 3 மீற்றர் வரை இவ்வாறான நிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் கடலை அண்மித்து இருக்கும் மக்களை அவதானமாக செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்து தெரிவிக்க