உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வெளிநாட்டு இராணுவத்திற்கு நாட்டை காட்டிகொடுக்க முடியாது! – சஜித்

நாட்டை பாதிப்பிற்குள்ளாக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதைய அரசாங்கம் முற்படாது என வீடமைப்பு மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு இராணுவத்திற்கு இந்த நாட்டை ஒருகாலமும் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் வெளிநாட்டு இராணுவத்துக்கு வேறொரு தளத்தை அமைப்பதற்கு எந்தவொரு ஒப்பந்தமும் கைசாத்திடப்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க