வெளிநாட்டு செய்திகள்

இடைத்தேர்தலில் தனித்தே போட்டி – மாயாவதி


உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள், பா.ஜ.க.கட்சியை வீழ்த்துவதற்கு கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
இதன்போது 80 மக்களவைத் தொகுதிகளில் வெறும் 15 இடங்களில் மாத்திரமே இந்த கூட்டணி வெற்றியடைந்திருந்தது.
தற்போது 11 சட்டமன்ற தொகுதிகளும் தற்போது வெற்றிடமாகியுள்ளமையினால் இவைகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையிலேயே மாயாவதி தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க