வெளிநாட்டு செய்திகள்

இந்திய விமானத்தை தேடும் பணியில் இஸ்ரோ,கடற்படை இணைந்தன

சீன எல்லையில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணியில் இஸ்ரோவும், கடற்படையும் இணைந்துள்ளன.

விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 13 பேருடன் நேற்று முன்தினம் அசாம் மாநிலத்தில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு சென்ற ஏ.என்.32 ரக விமானம் சீன எல்லையோரம் மாயமானது. இதனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிற போதிலும் விமானம் குறித்த தகவல்களை பெறுவதில் சவால் எழுந்துள்ளது.

இந்நிலையில் கடற்படை மற்றும் இஸ்ரோ தேடுதல் பணியில் இணைந்துள்ளன. இஸ்ரோவின் செயற்கைகோள்கள் தேடுதல் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை விமானம் கட்டுப்பாட்டறை தொடர்பை இழந்த சமயம் மலைப்பாங்கான இடத்தில் பயணித்துள்ளது என்பதால் விமானம் நொறுங்கி இருக்க வாய்ப்புள்ளதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க