உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரணிலின் அரசாங்கத்துடன் இணங்கி செல்ல தயார்- ஜனாதிபதி

புதிய நோக்குடன் செயற்பட்டால் தாம் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து முன்செல்லத் தயார் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் இந்தக்கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என்ற தகவலை அவர் அறிவித்திருந்தார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகியிருந்தது.

கடநத ஒக்டோபர் மாதத்தின் பின்னர்; அரசாங்கத்துடன் முரண்பாடுகளை கொண்டிருந்த ஜனாதிபதி, பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்துடன் மீண்டும் இணங்கிச்செல்ல தயார் என்று அவர் கூறியிருப்பது இலங்கை அரசியலில் புதியப் பாதையை ஏற்படுத்தியுள்ளது என்று கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க