உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு சீயோன்   குண்டுவெடிப்பு. படுகாயமடைந்த ஒருவர் உயிரிழப்பு.

ஏப்ரல் மாதம் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் இன்று மாலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

சீயோன் தேவாலயத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிசிச்சை பிரிவில் சிசிச்சை பெற்றுவந்த  அருண்பிரசாந் என்பவரே உயிரிழந்துள்ளார்.

(ஏப்ரல் மாதம் 22திகதி)மேலதிக சிசிச்சைக்காக உலங்கு விமானத்தின் மூலம் கண்டி போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு 47 நாட்களாக தொடர்ச்சியாக சிசிச்சை அளிக்கப்பட்ட நிலையிலே அருண்பிரசாந் இன்று உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு இருதயபுரத்தினை சேர்ந்த செ.அருண்பிரசாத்(வயது-30)எனும் வெல்டிங் கடை உரிமையாளராவார்..

இவரின் மரணத்தை அடுத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது

கருத்து தெரிவிக்க