உள்நாட்டு செய்திகள்புதியவை

சுகாதார அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக இவ்வாறு டெங்கு தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட ஆரமபம் முதல் இதுவரையான காலப்பகுதியில், 19 ஆயிரத்து 215 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 19 உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெங்கு நுளம்புகள் பரவாமல் இருக்கும் வகையில் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க