உள்நாட்டு செய்திகள்புதியவை

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்: இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு (Organisation of Islamic Cooperation) இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சவுதியில் நடைபெற்ற 14ஆவது தேசிய மாநாட்டின் போது இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க