உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

முஸ்லிம் அரசியல் தலைமைகள் முடிவை அறிவித்தன!

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.

இது குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூஃப் ஹக்கீன் சற்றுமுன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளிட்டார்.

அமைச்சரவை அந்தஸ்து உள்ள, அந்தஸ்து அற்ற அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களே இவ்வாறு பதவி விலகுகின்றனர்.

பதவி விலகல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று மாலை அறிவித்துள்ளதாகவும்  ஹக்கீம் தெரிவித்தார்.

இருந்த போதும் தாம் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு பின்வரிசையில் இருந்து கொண்டு ஆதரவு வழங்க இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க