கிழக்கு செய்திகள்

 களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையைச் சூழ கண்காணிப்புக் கமராக்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைத் தொகுதியில் கண்காணிப்புக்கமாரக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜின் வேண்டுகோளுக்கிணங்க இன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் பட்டிருப்புத் தொகுதியின் பிரதான சந்தை தொகுதியாக இது காணப்படுகிறது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள  நிலைமை காரணமாக இச்சந்தைத் தொகுதிக்கு வரும் மக்களின் பாதுகாப்பு  கருதி அப்பகுதியை சூழ 11 பாதுகாப்புக் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும்,  இப்பொதுச் சந்தைக்கு வரும் மக்கள் அச்சமின்றி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் எனவும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் இதன்போது தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க